Subscribe:

வியாழன், 21 நவம்பர், 2013

...காலம் ...

...காலம் ...
கவிஞர் கஸ்தூரிநாதன் - குழிபிறை

பிள்ளையாய் பிறந்த காலம்
பிறகுநான் தவழ்ந்த காலம்
துள்ளியே திரிந்த காலம்
பள்ளியில் படித்த காலம் 
பாவையை பிடித்த காலம் 
வெள்ளமாய் திரண்ட காலம் 
வீணான கெட்ட காலம் 

காதலில் கொஞ்ச காலம் 
காமததில் கொஞ்ச காலம் 
நோதலில் கொஞ்ச காலம் 
நோய்தனில் கொஞ்ச காலம்
வேதனை கொஞ்ச காலம் 
வீணுக்கு கொஞ்ச காலம் 
ஆதலால் வாழ்ந்த காலம் 
அனைத்தும் கெட்ட காலம்

கனவிற் மிதந்த காலம் 
கற்பனையில் பறந்த காலம் 
தினமும் நான் நடந்த காலம் 
திகைத்து நான் கிடந்த காலம் 
மனதுக்குள் அழுத காலம் 
மற்றவர்கள் வதைத்த காலம் 
நினைவுகள் குறைந்த காலம் 
நினைத்திட்டால் கெட்ட காலம் 

பகையினை வளர்த்த காலம்
பாதை நான் தொலைத்த காலம் 
வகையின்றி உழன்ற காலம் 
வாழ்வெலாம் சூழன்ற காலம் 
தகையிலா இந்தக் காலம்
தாரகை உதிர்த்த காலம் 
சிகையென கொல்லும் காலம் 
முடியட்டும் எனது காலம் 

நன்றி : இனிய நந்தவனம் இதழ் 2008 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக