Subscribe:

வியாழன், 21 நவம்பர், 2013

4 கோயில்களில் கும்பாபிஷேகம்

பொன்னமராவதி, :  பொன்னமராவதி அருகே உள்ள ரெட்டியாபட்டியில் உள்ள வெங்கடத்தி அம்மன், வெங்கடேச பெருமாள், பிடாரி அம்மன் சுவாமிகளின் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கடந்த 11ம் தேதி முதல் யாகசாலை பூஜை நடந்தது. நேற்று கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் கோபுரத்தில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றினர். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ரெட்டியாபட்டி பொதுமக்கள் செய்திருந்தனர்.
திருமயம்: திருமயம் ஒன்றியம் ஆத்தூர் காருடையார் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி முதல் கால, 2ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று சுப்பையா சிவாச்சாரியார் தலைமையில் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருமயம் ஒன்றிய முன்னாள் துணை சேர்மன் ஆவுடையப்பன், ஊராட்சி தலைவர்கள் சரஸ்வதி, சிங்காரம், திருப்பணிக்குழு தலைவர் சின்னையா, நிர்வாகிகள் கருப்பையா, பிடாரன், வருவாய் ஆய்வாளர் அபுபக்கர், பனையப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கவிஞர் கஸ்தூரிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருமயம் ஒன்றியம் மேலப்பனையூர் அருகே உள்ள குளமங்கலம் பராசக்தி அம்மன்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் சுப்பிரமணியன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கருப்பையா, முன்னாள் கவுன்சிலர் அழகப்பன், ஊராட்சி தலைவர் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ராங்கியம் அடுத்த குருவிக்கொண்டான்பட்டியில் உள்ள விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் கும்பாபிஷேக விழா கமிட்டியினர், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

...காலம் ...

...காலம் ...
கவிஞர் கஸ்தூரிநாதன் - குழிபிறை

பிள்ளையாய் பிறந்த காலம்
பிறகுநான் தவழ்ந்த காலம்
துள்ளியே திரிந்த காலம்
பள்ளியில் படித்த காலம் 
பாவையை பிடித்த காலம் 
வெள்ளமாய் திரண்ட காலம் 
வீணான கெட்ட காலம் 

காதலில் கொஞ்ச காலம் 
காமததில் கொஞ்ச காலம் 
நோதலில் கொஞ்ச காலம் 
நோய்தனில் கொஞ்ச காலம்
வேதனை கொஞ்ச காலம் 
வீணுக்கு கொஞ்ச காலம் 
ஆதலால் வாழ்ந்த காலம் 
அனைத்தும் கெட்ட காலம்

கனவிற் மிதந்த காலம் 
கற்பனையில் பறந்த காலம் 
தினமும் நான் நடந்த காலம் 
திகைத்து நான் கிடந்த காலம் 
மனதுக்குள் அழுத காலம் 
மற்றவர்கள் வதைத்த காலம் 
நினைவுகள் குறைந்த காலம் 
நினைத்திட்டால் கெட்ட காலம் 

பகையினை வளர்த்த காலம்
பாதை நான் தொலைத்த காலம் 
வகையின்றி உழன்ற காலம் 
வாழ்வெலாம் சூழன்ற காலம் 
தகையிலா இந்தக் காலம்
தாரகை உதிர்த்த காலம் 
சிகையென கொல்லும் காலம் 
முடியட்டும் எனது காலம் 

நன்றி : இனிய நந்தவனம் இதழ் 2008