Subscribe:

புதன், 20 நவம்பர், 2013

கம்பன் விழா இன்று தொடக்கம்

புதுக்கோட்டை கம்பன்கழக 38 -ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் புதன்கிழமை (அக்.16) தொடங்கி 20-ம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகிறது.
 புதுக்கோட்டை டவுன்ஹாலில் புதன்கிழமை நடைபெறும் தொடக்க விழாவில் மலர் வெளியிடும் நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன், அரசு முதன்மைச் செயலர் வெ. இறையன்பு, சாகித்ய அகாதெமி ஆலோசனைக்குழு உறுப்பினர் தங்கம்மூர்த்தி, கோவை கம்பன் கழகச்செயலர் நா. நஞ்சுண்டன், சேலம் ஏ.கே. பழனியப்பன், பி. கருப்பையா, மருத்துவர் கே.எச். சலீம், பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
 2-ம் நாளான வியாழக்கிழமை நடைபெறும் திருச்சி அகில இந்திய வானொலி நிலைய 75 -ம் ஆண்டு நிறைவு வைரவிழாவில், கம்பன் கழகச்செயலர் ரா. சம்பத்குமார், திருச்சி வானொலி நிலைய இயக்குநர் (பொ) போ. பிரபாகரன் உள்ளிட்டோர் பேசுகின்றனர். , இதையடுத்து நடைபெறும் சந்திப்பு வளையம் நிகழ்வில் பேராசிரியர் ஆ.வா. ராஜகோபாலன் ஆகியோர் பேசுகின்றனர். இரவு பேராசிரியர் சோ. சத்தியசீலன் தலைமையில் வழக்காடு மன்றம் நடைபெறுகிறது.
 அக்.18-ல் இளையோர் மன்றம், தேவகோட்டை ஏ.ஆர். ராமநாதனை நடுவராகக் கொண்ட வழக்காடு மன்றம், இரவு வர்த்தகர் கழகத் தலைவர் சீனு. சின்னப்பா தலைமையில் தமிழிசை அரங்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 நான்காம் நாள் (அக்.19) மாலை டாக்டர் வீ.கே.ஆர். நூற்றாண்டு விழா, இதையடுத்து இரவு குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் அ. ரவிச்சந்திரன் தலைமையில் கவியரங்கு நடைபெறுகிறது. 
 நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் எஸ். சந்துரு தலைமையில் நடைபெறும் மகளிர் சுழலும் சொல்லரங்கில், முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி, சென்னை பர்வின்சுல்தானா உள்ளிட்டோர் பேசுகின்றனர். இதையடுத்து பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. 
 ஏற்பாடுகளை புதுகை கம்பன் கழக நிர்வாகிகள் சீனுசின்னப்பா, ரெ. ராமையா, ரா. சம்பத்குமார், சி. கோவிந்தராஜன், அ. காசிவிசுவநாதன், சி. ராமச்சந்திரன், சி. ராமச்சந்திரன், எஸ்.ஆர். ஜானகிராமன், கறு. ராமசாமி, வீ.கே. கஸ்தூரிநாதன் உள்ளிட்டோர் செய்கின்றனர்.

1 கருத்து:

Information சொன்னது…

மிகவும் அருமை

கருத்துரையிடுக